Tuesday 24 July 2012

Perumaidhanai Kaappom


பெருமைதனைக் காப்போம்
                                 -சாரதா ராஜாமணி 

இமயம்முதல் குமரிவரை இந்தியனாடு!
சமயக் குரவர் பலரறிந்த சத்தியநாடு!
இதயம் பேசும் இன்பங்களை ஈந்திடும் நாடு
உதய சூரியன் பொற்கிரணங்கள் உயர்த்திடும் நாடு!

அன்புக்கடலாம் அண்ணல் காந்தி பிறந்திருந்த நாடு!
அருட்கடலாம் அமரர் நேரு அவதரித்த நாடு!
உண்மை அன்பு சேவைகளின் உறைவிடம் நம் நாடு!
உயர்ந்த உள்ளச் சான்றோர்கள் உதித்திருந்த நாடு!

இயற்க்கை அன்னை இதயம் குளிர இயங்குகின்ற நாடு!
பயன்மிகுந்த கனிவளமும் பரவி கிடக்கும் நாடு!
மண் வளமும், மலை வளமும் மிகுந்திருக்கும் நாடு!
கண் விரிய வெளிநாட்டார் வியந்திருக்கும் நாடு!

நாட்டிலுள்ள மக்களெல்லாம் ஒன்று கூடுவோம்!
வீட்டில் உள்ள மழலைகளை சிறக்க வளர்ப்போம்!
தாயை நிகர்க் கல்விதனை தவறாமல் கற்போம்!
தாய்நாட்டின் பெருமைதனைத் தடையின்றிக் காப்போம்!

No comments:

Post a Comment